Monday, February 14, 2011

சிரிப்பு விடுகதை !

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் . இரண்டு பழு ; ஒண்ணுல தண்ணியே இல்ல .
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்தது மூணு பேரு ; இரண்டு பேரு நொண்டி , ஒருவனுக்குக் காலேயில்ல .
காலில்லா மனுஷனைக் கட்டிய மனைவி மூணு ; இரண்டு பேரு முடம் , ஒருத்திக்கு கையேயில்லை .
கையில்லா முடத்துக்கு பிறந்த பிள்ளை மூணு ; இரண்டு பேரு குருடு , ஒரு பிள்ளைக்குக் கண்ணேயில்லை .
கண்ணில்லா பிள்ளையை வளர்க்க வந்தவங்க மூணு ; இரண்டு பேரு ஊமை , ஒருத்திக்கு வாயேயில்லை .
வாயில்லா மனுஷியிடம் விஷயத்தைக் கேட்க வந்தவங்க மூணு ; இரண்டு பேரு செவிடு ; ஒருவனுக்குக் காதேயில்லை .
அத்தனை பேரையும் ஆதரிக்க வந்தவங்க மூணு ; இரண்டு பேரு முண்டம் , ஒருவனுக்குத் தலையேயில்லை .
--- ராஜம்மாள் நடராஜன் , திருநெல்வேலி . மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி

2 comments:

சின்னப் பையன் said...

Its not too simple to explain this riddle.

Check here for answer: (This is not my site though!):

http://haridasarapadagalu.blogspot.com/2010/04/mullu-koneya-mele-muuru-kereya-katti.html

க. சந்தானம் said...

Its not too simple to explain this riddle -- Thanks .