Saturday, February 19, 2011

நீச்சல் அடி... பேப்பர் படி !

இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் உள்ள செத்த கடல் என்றழைக்கப்படும் டெட் சீ-யில் நீங்கள் மிதந்து கொண்டே சொகுசாகப் பேப்பர் படிக்கலாம் , காபி குடிக்கலாம். காரணம் , இந்தக் கடலின் உப்புத்தன்மை மிக அதிகம் . கிட்டத்தட்ட 33.7 % உப்பு . மற்ற கடலைவிட இது 8.6 மடங்கு அதிகம் . அதனாலேயே 1,240 அடி ஆழம்கொண்ட இக்கடலில் மிதப்பது சாத்தியமாகிறது . இதில் குளித்தால் தோல் நோய்களும் , சுவாசக் கோளாறுகளும் சரியாகும் என்பது மக்கள் நம்பிக்கை . இக்கடலின் ' பிட்டுமென் ' ( Bitumen ) என்ற பொருளை எடுத்துதான் எகிப்து பிரமிடுகளின் மம்மிகளைப் பதப்படுத்தினார்களாம் . இந்தக் கடலுக்கு அருகில் உள்ள குன்றின் மீது கட்டப்பட்ட ' மஸாதா ' எனும் யூதர்களின் கோட்டையைக் கைப்பற்ற ரோமானியர்கள் முயற்சி செய்தபோது , தோல்வியை விரும்பாத ஆயிரம் யூதர்கள் மலையில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்களாம் !
--- பா . முருகானந்தம் ,, கடல் விகடன் இணைப்பு . 09 .12. 2009 .

3 comments:

சக்தி கல்வி மையம் said...

சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...

சக்தி கல்வி மையம் said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
see.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html

க. சந்தானம் said...

அன்பு வேடந்தாங்கல் -- கருன் அவர்களுக்கு ! அழுத்தமான பதிவு -- ஓட்டும் போட்டுட்டோம்ல . என்று கூறியிருக்கிறீர்கள் . நன்றி !