Tuesday, February 1, 2011

அளவுக்கு மிஞ்சினால் ?

இரும்பு சத்து , விட்டமின்கள் அளவுக்கு மிஞ்சினால் ?
நம் உடலுக்கு ஒருகால கட்டத்தில் அவசியமான சத்து மற்றொரு காலகட்டத்தில் நஞ்சாக மாறி விடுவது எதனால் ? உதாரணமாக , இரும்பு , மற்றும் தாமிரம் உள்ளிட்ட கனிம பொருட்கள் நம் உடலுக்கு சத்தளிக்கின்றன . இரும்பு சத்து குறைபாடு காரணமாக , ரத்த சோகை ஏற்படுகிறது . நம் முடியின் நிறத்தை தாமிரம் நிர்ணயிக்கிறது . மற்றும் பல நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது . இளம் வயதில் இந்த சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் ஒன்றும் கேடு இல்லை . 50 வயதுக்கு பின்னர் கனிம வகை சத்துக்களை அதிகம் எடுத்துக் கொண்டால் அது நஞ்சாக மாறி உடலின் திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் . ஞாபகத்திறன் குறைபாடு உள்ளிட்ட வயது தொடர்பான நோய்கள் பரவ காரணமாக அமைந்துவிடும் .
* எனவே முதியவர்கள் விட்டமின் மற்றும் கனிம சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் .
* குறைந்த அளவிலான ஆடு மற்றும் மாட்டிறைச்சிகளை உண்பது நல்லது . ( இறைச்சிகளில் அதிக இரும்பு மற்றும் தாமிர கனிமம் உள்ளது .)
* தாமிர குழாய்களில் இருந்து வரும் தண்ணீரை குடிப்பதை தவிர்க்கவும் .
* இரத்த தானம் செய்வதன் மூலம் உடம்பில் உள்ள இரும்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் .
( ஆதாரம் : Chemical Research in Toxicology , December 7 ).
--- பாடம் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

3 comments:

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

தகவலுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

க. சந்தானம் said...

மதுரை சரவணன் அவர்களுக்கு வணக்கம் ! நன்றி !