Friday, February 18, 2011

தெரியுமா ? தெரியுமே !

* கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கங்கள்தான் சுனாமியை உருவாக்குகின்றன என்பதைக் கண்டுபிடித்தவர் தோக்கிதிடேஸ் என்பவர் . இவர் கி. மு. 460 -க்கும் 395 -க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் .
* 1912 ஏப்ரல் 14-ம் தேதி 66 ஆயிரம் டன் எடை உள்ள டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது மோதி மூழ்கியது . 1,513 பேர் உயிர் இழந்தனர் . லைஃப் போட்களின் எண்ணிக்கை உட்பட நாவலுக்கும் நிஜத்துக்கும் நூற்றுக்கணக்கான ஒற்றுமைகள் இருந்தன . ராபர்ட்ஸ் தன் நாவலில் அந்தக் கற்பனைக் கப்பலுக்கு வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா ? - டைட்டன் ! மார்கன் ராபர்ட்சன் ஓர் எழுத்தாளர் . டைட்டானிக் கப்பலின் கதையை எழுதியது 1898 -ம் வருடத்தில் .
* மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தில் இரணியனைக் கொன்றார் . நாராயண பக்தி கொண்ட பிரகலாதன் நன்முறையில் ராஜபரிபாலனம் செய்து ,பின்னர் அவன் மகன் அந்தகாசுரன் அரியணை ஏறினான் . இரணியனை ஒத்த தீய குணங்களை உடைய அந்தகாசுரன் தவத்தால் பெற்ற சக்தியால் அதிபலசாலியாகி அனைவருக்கும் துயர் விளைவித்தான் .
* " There must be an expiry date for blaming elders " என்று சொல்வார்கள் . பெரியவர்களைக் குறை சொல்கிற நேரத்தை, அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்வதற்குச் செலவிட முயற்சிக்கலாம் . அது இன்னும் பல வாயில்களைத் திறக்கும்
* .அமெரிக்க இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு சரியாக காதுகேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் . ஐபாட், எம்பி3 கருவிகளை காதில் மாட்டிக்கொண்டு முழு ஒலியில் கேட்பதுதான் காரணம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது .
* ஒலி அளவு 85 டெசிபலுக்கு மேல் போனால் செவித்திறன் பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
* முப்பது வயதைத் தொடுபவர்களுக்கு தங்களுக்கு வயதாகி விட்டதோ, இருபது வயதிப் பெண் தோற்றம் போய்விட்டதோ என்று அவர்களது அழகு மீது வரும் ஏஜிங் பிரச்னைதான் " கெராஸ்கோ போபியா ' என்பது ..
* தன் மனைவி மக்களைவிட நாயின் மீது அதிக அன்பு பாராட்டும் ஐரோப்பியர்கள்கூட 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாய்க் கறி சாப்பிட்டு இருக்கின்றனர் . ஜெர்மனியில் 1986 -ல் தான் நாய்க் கறி தடை செய்யப்பட்டது .

2 comments:

மதுரை சரவணன் said...

நல்ல தொகுப்பு...வாழ்த்துக்கள்

க. சந்தானம் said...

மதுரை சரவணன் அவர்களே ! நல்ல தொகுப்பு . என்று சொல்லியுள்ளீர்கள் . நன்றி !