Thursday, June 2, 2011

செயற்கை கர்ப்பப்பை .

விரைவில் வருகிறது செயற்கை கர்ப்பப்பை .
கல்யாணம் நடந்து பலவருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சில பெண்கள் இருக்கிறார்கள் . இவர்களில் பலருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன . இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது .
இயற்கையான கர்ப்பப்பை போன்றே செயற்கையான கர்ப்பப்பையை இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது . தகுதிவாய்ந்த பெண்கள் மகப்பேறு காலத்தில் கொடுத்த செல்களைக் கொண்டு , ஆய்வகத்தில் அந்த செல்களை பகுப்பாய்வு செய்து கடினமாக உழைத்து செயற்கை கர்ப்பப்பையை உருவாக்கியுள்ளனர் . இந்த செயற்கை கர்ப்பப்பையிலும் இயற்கையைப் போன்றே கரு முட்டைகளை உருவாக்கமுடியும என்பதால் , கருமுட்டை உருவாகாத குறைபாடு உள்ள பெண்களுக்கு இந்த செயற்கை கர்ப்பப்பையை பொருத்தினால் உடனே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது .கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்ட பெண்கள் அதை அகற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . அவர்களுக்கும் இந்த செயற்கை கர்ப்பப்பை உதவிகரமாக இருக்கும் .
செயற்கை கர்ப்பப்பை உருவாக்க தகுந்த உடல் திறன் கொண்ட ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை செல் ஒன்று வாங்கப்பட வேண்டும் . பின்னர் , அதை தேவைப்படுவோரின் உடலில் செலுத்தி தேன்கூடு போன்ற முறையில் பல செல்களாக உருவாக்கி செயற்கை கர்ப்பப்பை உருவாக்கி , அதன் பிறகு செயற்கை கர்ப்பப்பையில் கரு முட்டைகளையும் உருவாக்கி கரு வளரச் செய்வதற்கு தேவையான சிகிச்சை அளித்தால் கரு வளரும் .
--- தினமலர் .18 / 9 /10 .

No comments: