Monday, June 20, 2011

புத்திசாலிகள் !

எல்லாவறறுக்கும் சரியான விடை சொல்பவர்களை ' புத்திசாலிகள் ' என்று சொல்லிவிட முடியுமா ?
டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றில் துப்பறியும் வேலைக்கு ஆள் தேர்வு நடந்தது . மூன்று பேர் சென்றார்கள் . முதல் ஆளிடம் இண்டர்வியூ செய்த அதிகாரி ஒரு போட்டோவைக் காட்டினார் .பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படம் அது . " இது ஒரு பயங்கர கிரிமினலோட போட்டோ .இவனை ஞாபகம் வச்சுக்க எதை நீ அடையாளம் எடுத்துக்குவ ? ' என்று அதிகாரி கேட்டார் .
' ரொம்ப ஈஸி சார் . இவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு ' என்றான் முதல் ஆள் . அதிகாரிக்கு சரியான கோபம் வந்தது . ' யோவ், சைடு போஸ்ல எடுத்த போட்டோவுல ஒரு கண்ணுதான்யா தெரியும் . இதுகூடதெரியாத முட்டாளா இருக்கியே ' என்று விரட்டி விட்டார் .
இரண்டாவதாக வந்த ஆளிடமும் அதே போட்டோவைக் காட்டி, அதே கேள்வியைக் கேட்டார் . ' ரொம்ப ஈஸி சார் . இவனுக்கு ஒரு காதுதான் இருக்கு ' என்றான் அந்த ஆள் . அதிகாரி
நொந்து நூலாகி விரட்டினார் .
சலிப்புடன் மூன்றாவது ஆளிடம் அந்த போட்டோவைக் காட்டி கேள்வி கேட்டார் .
படத்தை உற்றுப் பார்த்த மூன்றாம் ஆள், ' இவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார் ' என்றான் . அதிகாரிக்கு ஆச்சர்யம் . அந்த குற்றவாளியின் ஃபைலை எடுத்துப் படித்தார் .
என்ன அதிசயம் . அவன் கான்டாக்ட் லென்ஸ் போடுபவன்தான் .
' பிரமாதம்பா ... எப்படி கண்டுபிடிச்சே ? '
' ரொம்ப ஈஸி சார் . இவனுக்கு ஒரு கண், ஒரு காதுதான் இருக்கு . கண்ணாடி போட முடியாதே ! '
--- தினகரன் . வசந்தம் . நாட்டாமை பதில்கள் . 26 . 9 . 2010 .

No comments: