Monday, September 5, 2011

' ஃபோபியா '

' ஃபோபியா '
அர்த்தமின்றி ஒரு விஷயத்துக்குப் பயப்படுவதற்குப் பெயர் தான் ஃபோபியா . ஒரு சர்வேயில் 91 சதவிகித இளைஞர்கள் ' ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருக்கிறது ' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் . மனிதர்களுக்கு விநோதமான, வேடிக்கையான, விந்தையான ஃபோபியாக்கள் உண்டு . அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் . திறந்தவெளி, பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களைக் கண்டு பயந்தால், அதற்கு அகோரஃபோபியா என்று பெயர் . இவர்கள் அறையைவிட்டு வெளியே வரவே மாட்டார்கள் . சமூகத்தில் மற்றவர்களோடு கலந்து பழக அஞ்சினால், அது சோஷியல் ஃபோபியா . இவர்கள் அறிமுகம் இல்லாதவர்களோடு கை கொடுக்கவே தயங்குவார்கள் . குறிப்பிட்ட பொருட்கள், சூழ்நிலைகள், செயல்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பயப்படுபவர்களைப் பலவகையான ஃபோபியாக்கள் பிடித்து ஆட்டும் . நாயைக் கண்டு நடுங்குவதில் இருந்து உணவைக் கண்டு உதறுவது வரை தொட்டதற்கெல்லாம் ஃபோபியா உண்டு . அதற்குப் பெயர் சிம்பிள் ஃபோபியா . படுக்கைக்குச் செல்வதற்கே சிலர் பயப்படுவார்கள் . காரணம், கெட்ட கனவு . சிரிப்பதற்கே சிலர் சீரியஸாக யோசிப்பார்கல் . காரணம், ஹார்ட் அட்டாக் பயம் .
--- பா. முருகானந்தம் . பயம் விகடன் , 7 . 4 . 10 .

No comments: