Friday, September 30, 2011

மாரடைப்பு வருமா ?

மாரடைப்பு வருமா ? ரத்தம் சொல்லிவிடும் .
எந்த நேரத்திலும் வந்து தாக்குதல் நடத்தி 5 நிமிடத்தில் ஆளை காலி செய்யும் நோய் எது என்று கேட்டால், அது மாரடைப்புத்தான் . அந்த நோய் வந்திருக்கிறதா என்பதை முங்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியாது . இப்போது, அதற்கும் வழி ஏற்பட்டுவிட்டது . ரத்த பரிசொதனைவாயிலாக, ஒருவருக்கு மாரடைப்பு வருமா ? என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம் என்று கூறுகிறார்கள் .
இதயத்தில் ஒருவகை புரோட்டின் உண்டு . அந்த புரோட்டினுக்கு " டிராப்போனின் டி " என்று பெயர் . இந்த டிரோப்போனின் இதயத்தின் தசைகளிலும், இதய ரத்தக்குழாய்களிலும் இருக்குமாம் . இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும் போது, இந்த டிராப்போனின் சிதைந்து ரத்தத்தில் கலக்குமாம் . அப்படி கலந்து வரும்போது, அதை ரத்தபரிசோதனையில் அறிந்துகொள்ளலாம் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரத்தத்தில் டிராப்போனின் இருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்று நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஆய்வுதகவல் தெரிவிக்கிறது .
இதுவரை 3 ஆயிரத்து 500 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்து பார்த்ததில் இந்த டிராப்போனின் சிதைவுகள் இருப்பது கண்டறியப்பட்டது .
---- தினமலர் , 14 . 12 . 2010 .

No comments: