Thursday, October 15, 2015

தெரிந்ததும் தெரியாததும்.

  கரஹரப்ரியா, ஸ்ரீரஞ்சனி, ஆபோகி ஆகிய மூன்று ராகங்களும் ஒரே பரம்பரையில் உள்ளவை.  கரஹரப்ரியா ஒரு சம்பூர்ண மேளகர்த்தா ராகம்.  அதன் மேளம் 22.  அதிலிருந்து பஞ்சமத்தை அகற்றினால் ( வர்ஜ்யம் ).  அதுவே ஸ்ரீரஞ்சனி.  பஞ்சமமும் நிஷாதமும் ( நி) இல்லாமல் பாடினால் கிடைப்பது ஆபோகி.  இது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.  தெரியாதது இதுதான்.  வீணைக்கென்றே பிறப்பெடுத்த எஸ்.பாலசந்தர், இந்த மூன்று ராகங்களையும் சற்றும் சுவை குன்றாமல் உரிய சிரமத்துடன் ஆல் இந்தியா ரேடியோ கச்சேரி ஒன்றில் அடுத்தடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார்.
-- எஸ்.சிவகுமார்.  இசை நாட்டியம் நாடகம்.
--   ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014. 

No comments: