Saturday, October 22, 2016

பிறப்பு - இறப்பு.

ஒவ்வொரு பிறப்பும் கற்றுக்கொள்ள
வருகிறது;
ஒவ்வோர் இறப்பும் கற்றுத்தந்து
போகிறது.
இயல்பான மரணம் மூன்று நிலை
களைத் தாண்டுகிறது.
உறுப்புகள் தாமாகவே இயங்குவது
ஒரு நிலை.
உறுப்புகள் மருத்துவர்களால் இயங்குவது
இரண்டாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்குவது
மூன்றாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்கத் தொடங்கிவிட்டால், மரணம் பெரும்பாலும் வார்டுக்கு வெளியே வராண்டாவில் நிற்கிறது என்று பொருள்.
சிறுநீரகம் செய்த வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கியபோதே, நம்பிக்கையில் பாதி நசிந்துபோனது.
-- கவிப்பேரரசு வைரமுத்து. ( தனது தந்தையார் ராமசாமி அவர்கள் மரணமடைந்தபோது எழுதியது... ).
-- ஆனந்த விகடன்.03-04-2013.

No comments: