Friday, February 3, 2017

புத்திசாலி ஐ - போன் !

  பல  ஆயிரம்  கொடுத்து  ஆசை  ஆசையாய்  வாங்கும்  ஸ்மார்ட்  போன்கள், ஒரு  நொடிப்பொழுதில்  கைதவறி  கீழே  விழும்போது  ஏற்படும்  தவிப்பு  சொல்லி  மாளாது.  மேலும்  அதில்  நாம்  சேமித்து  வைத்திருந்த  செல்போன்  எண்கள்  உள்ளிட்டவை  அனைத்தையும்  மீட்க  முடியுமா  என்ற  பரிதவிப்பு  பலருக்கும்  ஏற்படுவதுண்டு.  இதைப்  போக்கும்  வகையில்  புதிய  வகை  புத்திசாலி  ஐ - போன்களை  உருவாக்குகிறது  ஆப்பிள்  நிறுவனம்.
     இந்த  ஸ்மார்ட்டபோன்கள்  கீழே  விழும்போது  அதிலுள்ள  சென்சார்கள்  செயல்பட்டு  முக்கியமான  பகுதிகள்  சேதமடைவதைத்  தடுத்துவிடும்.  கீழே  விழுவதில்  ஏற்படும்  சேதத்தைக்  கணக்கிட்டு  முக்கியமான  பகுதிகளை  போனின்  மையப்பகுதிக்கு  நகர்த்திவிடும்.
     இப்போது  வரும்  ஐ - பேட்  மற்றும்  ஐ - போன்களில்  ஆக்சிலரோமீட்டர்கள்,  கைரோஸ்கோப்ஸ்  மற்றும்  ஜிபிஎஸாகியன  உள்ளன.  போன்  கீழே  விழும்போது  அதிலுள்ள  சென்சார்கள்  போனின்  முக்கிய  பகுதிக்குத்  தகவல்  அனுப்பு  விடும்.  அப்போது  அதிலுள்ள  மோட்டார்  விரைவாக  செயல்பட்டு  ஐ - போன்  பக்கவாட்டில்  விழும்படி  செய்து  சேதத்தின்  அளவைக்  குறைத்துவிடும்.
     நாம்  வாங்கும்  ஐ -போன்  புத்திசாலித்தனமாகச்  செயல்பட்டால்  நல்லதுதானே!
--  (  தொழில்  நுட்பம் ).  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.  

No comments: