Thursday, August 13, 2009

தகவல் களஞ்சியம் .

* 1660 ஆண்டுக்கு முன்புவரை கடிகாரங்களில் மணியைக் காட்டும் முள் மட்டுமே உண்டு .
* உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது .
* தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும் . . .
* அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .
*மகாத்மா காந்தியை ' காந்தியடிகள் ' என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார் .
* சூரியக் கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும் .
* மழையை அளக்க ' புளூவியோ மீட்டர் ' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது .
*' போப் ' என்ற சொல் 'பாபா ' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும் .
* கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது .
* 50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் -- மூங்கில் .
* நின்றுகொண்டே உறங்கும் விலங்கு -- குதிரை .
* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -- செரி .

No comments: