Friday, November 6, 2009

பார்வை வெளிச்சம் .

சமீபதில் , அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப் பகுதியில் , பல ஆயிரம் வருடப் பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண் , மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்துபோனார் . இவர்தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண் . அவளது மரணத்தோடு உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது . இனி , அந்த மொழி பேசும் இனக் குழு உலகில் இல்லை . பல்கலைக்கழகங்களின் முயற்சியால் அந்த மொழிச் சொற்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன . ஆனால் , அதைப் பேசத் தெரிந்த பூர்வகுடி மனிதர் எவரும் இனி உலகில் இல்லை !
--- எஸ் . ராமகிருஷ்ணன் . ( சிறிது வெளிச்சம் ) ஆனந்தவிகடன் , 27 - 05 - 2009 .

No comments: