Tuesday, November 24, 2009

தமாஷ் !

* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* தாத்தா : " காலம் ரொம்பத்தான் மாறிப் போச்சு ! "
பேரன் : " ஏன் தாத்தா ? "
தாத்தா : " ராஜாவை மந்திரியாக்கிட்டாங்களாமே ! "
* ஒரு கல்லூரி மாணவரின் செல்ஃபோனை குடைந்தபோது கிடைத்த எஸ். எம். எஸ் .:
" இளநீர் , தண்ணீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது . பீர் , பிராந்தி , ரம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் ஒட்டும் ."
* இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் இரண்டு KINGS யாரெனத் தெரியுமா உங்களுக்கு ....?
1 . SMO - KING 2 . DRINK - KING . முடிஞ்சா இந்த மோசமான KINGS - கிட்டேர்ந்து உலகைக் காப்பாத்திக்கோங்க .
* " காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?"
" பைக் பஞ்க்சர் சார் !"
" சரி .... பஸ்ல வர்றது ...?"
" பஸ் வாங்க வசதி இல்லை சார் !"
* " டாக்டர் ! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும் ..."
" அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க !"
* " தவளை தண்ணியிலேயும் இருக்கும் , தரையிலேயும் இருக்கும் . ஆனா , நம்ம தலைவர் ..."
" தண்ணியிலே தரையில கிடப்பார் !"
* " நம்ம தலைவரு அஞ்சாவது படிக்கும்போதே கள்ளச்சாராயம் வித்தவர்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதை என்னால் நம்பவே முடியலை !"
" எதனால அப்படிச் சொல்றே ?"
" தலைவர் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்காரா ?"
* ' LOVE ' என்று சொன்னாலும் , ' காதல் ' என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது ... PICK UP , DROP , ESCAPE என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் .
* " வக்கீலுக்கும் , டாக்டருக்கும் என்ன வித்தியாசம் ?"
" தெரியவில்லையே "
" வக்கீல் சரியாக இல்லைன்னா கேஸ் முடியாது , டாக்டர் சரியில்லைன்னா கேஸ் முடிந்து விடும் !"

No comments: