Monday, November 30, 2009

சுலோகம் !

ஒரு சமயம் நாடகத் தந்தை சம்பந்த முதலியார் அவர்கள் சிவகெங்கையில் ஒரு வயோதிகரைச் சந்தித்தார் . அவருக்கு சுமார் 90 வயது இருக்கும் என்று முதலியார் அவர்கள் தீர்மானித்து , சற்று தயக்கத்தோடு அவரிடம் , " உங்களுக்கு என்ன வயதாகிறது ?" என்று கேட்டார் .
உடனே அவர் " ஒருவன் தன் வயதை வெளியில் சொல்லக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருகிறது .." எனச் சொல்லி அப்படி இருக்கும் அந்த வடமொழி சுலோகத்தையும் சொன்னார் .
இச்சம்பவம் நடந்த பிறகு , சம்பந்தமுதலியார் அவர்கள் " அந்த வடமொழி சுலோகத்தை நான் அவரிடம் சரியாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்லாமல் பொய்விட்டேன் ... தற்போது தங்கள் வயதைச் சொல்லிக் கொள்ளத் தயங்கும் சினிமா நடிகைகளுக்கும் , நடிகர்களுக்கும் அந்த் சுலோகத்தைச் சொல்லிக் கொடுத்திருப்பேனே !" என் வருந்தினாராம் .
--- ஆனந்தவிகடன் ( 21 - 02 - 1965 ) .

No comments: