Monday, November 9, 2009

சூரியன் .

ஒவ்வொரு மாதத்தில் ஒரு பெயர் .
12 ஆதித்தியர்கள் சேர்ந்து உருவானவரே சூரியன் . அவன் ஒவ்வொரு ராசியில் ஒரு பெயர் பெறுவான் . மேஷ ராசியில் அம்சமான் , ரிஷபத்தில் தாதா , மிதுனத்தில் சவிதா , கடகத்தில் அரியமான் , சிம்மத்தில் விஸ்வான் , கன்னியில் பகன் , துலாத்தில் பர்ஜன் , விருச்சிகத்தில் துவஷ்டா , தனுஷில் மித்திரன் , மகரத்தில் விஷ்ணு , கும்பத்தில் வருணன் , மீனத்தில் பூஷா என்பது சூரியன் பெறும்
பெயர்கள் .
உலகம் முதன் முதல் தோன்றிய போது பல ஒலிகள் அங்கு தோன்றின . அவற்றில் முதலாவதாக தோன்றிய ஓசை ஓம் என்று சொல்லப்படக்கூடிய மூல மந்திரமாகும் . ஆதி மந்திரமான ஓங்கார ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் அவதாரம் செய்தான் என்கிறது மார்க்கண்டேய புராணம் .
பிரம்மதேவனால் தோற்றுவிக்கப்பட்ட சப்த ரிஷிகளில் ஒருவர் மரீசி மகரிஷி . அவர் மகன் காச்யபர் . காச்யப்பரின் மனைவி அதிதி . அவள் வயிற்றில் பிறந்தவர்கள் துவாதச ஆதித்யர்கள் . இந்த பன்னிரெண்டு பேரும் ஒருவராகி சூரியன் என்ற பெயரை பெற்றனர் .
---- தினமலர் . பக்திமலர் , ஜூலை 16 . 2009 .

No comments: