Monday, December 16, 2013

சுட்டது நெட்டளவு

  அது ஒரு மனநல மருத்துவமனை....
     அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர்.  ஒரு நாள் சக நோயாளி ஒருவன் கிணற்றில்    குதித்துவிட , தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார்.
     அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது.  அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து,
" உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப்போகிறேன்" என்றார்.
    " சொல்லுங்க டாக்டர் ."
    " நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன்.  நீ வீடு செல்லலாம்.  இது நல்ல செய்தி."
    " ........"
    " துக்கமான செய்தி... நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்."
      அப்போது இடைமறித்த பட்டதாரி வாலிபர் சொன்னார், " டாக்டர் ... அந்த நோயாளி சாகவில்லை.  கிணற்றில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன்.  ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்."
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.  

No comments: