Thursday, December 19, 2013

விடை தேடும் பயணம்.

*  மாகாபாரத சகுனி காந்தார நாட்டைச் சேர்ந்தவர் என்பார்கள்.  அந்த காந்தாரம் இப்போது எங்கே உள்ளது ?
    -- அன்றைய காந்தாரம்தான் இன்றைய காந்தகார்,  ஆப்கானிஸ்தானில் உள்ளது.  இன்றைய பீகார் முன்பு மகதநாடாக விளங்கியது.  மகதத்தின்
    தலைநகரான  பாடலிபுத்திரம் இன்றைய பாட்னா.  ஒடிசா பகுதி கலிங்கம் என்று அழைக்கப்பட்டது.
*  லாக்ரிமல் சுரப்பி அதிகம் வேலை செய்தால் என்னவாகும் ?
    --- உடல்  பருமனாதல் தைராய்டு சுரப்பி குறைபாட்டால் உண்டாகலாம்.  அதிர்ச்சி அடைய வைக்கும் நிகழ்வுகலின்போது அட்ரினலின் அதிகமாகச்
    சுரக்கும்.  லாக்ரிமல் சுரப்பிகள் கண்களில் உள்ளன.  இவர்றின் இயக்கத்தால்தான் கண்ணீர் உண்டாகிறது.
*  வெள்ளைப் பூண்டின் தாவரயியல் பெயர் என்ன?
   ---  அலியம் சடைவம்.  வெங்காயமும் பூண்டின் குடும்பம்தான்.  வெங்காயத்தின் தாவர்வியல் பெயர் அலியம் சீபா.  மகாத்மா காந்திக்கும் ந்மக்கும் பிடித்த
   வேர்க்கடலையின் தாவர்வியல் பெயர்தான் அராகிஸ் ஹைபோகியா.
*  டைகோனாட் ( Tyconaut ) என்றால் என்ன?
   --- அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ரனாட் என்று அழைக்கப்படுகிறார்.  ரஷ்ய விண்வெளி வீரர் காஸ்மோனாட் என்று அழைக்கப்படுகிறார்.  சீன
    விண்வெளி வீரர் டைகோனாட் ( TYCONAUT ) என்று அழைக்கப்படுகிறார்.
-- ஜி.எஸ்.எஸ்.  வெற்றிக்கொடி.  அறிவு உயர்வு தரும். சிறப்புப் பகுதி .
--  ' தி இந்து ' நாளிதழ்.  திங்கள், நவம்பர் 18, 2013.

No comments: