Thursday, September 11, 2014

கபிலர் சொன்ன 99 மலர்கள்.

 சங்கத்தமிழ் நூல்களில் பத்துப்பாட்டில் ஒருநூல் கிறிஞ்சிப்பாட்டு.  இப்பாட்டில் ஒரு பெண் தினைப்புனம் காக்கச் செல்கிறாள்.  மலையில்,  சுனையில் இருந்த பூக்களைப் பறித்துக் குவித்து விளையாடுகிறாள்.  அவள் குவித்துள்ள மலர்களாக 99 மலர்களின் பெயர்களை வரிசையாகப் பட்டியல் இடுகிறார் கபிலர்.  இப்படி ஒரு பாட்டு குறிஞ்சிப்பாட்டில்  மட்டுமே உள்ளது.
     மலர்களின் மீது சங்கப்புலவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும், அறிவையும் விளக்கும் அரிய எடுத்துக்காட்டு இது.
     99 மலர்களைப் பட்டியலிட்ட குறிஞ்சிப்பாட்டு இதோ...
' ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
 தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
 செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
 உரிதுநாறு, அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
 எரிபுரை, எறுழம், கள்ளி, கூவிரம்,
 வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
 எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
 பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
 சும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
 விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
.குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
 குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
 போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
 செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
 கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
 தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
 குல்லை, பிடவம், சிருமா ரோடம்,
 வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
 தாழை, தளவம், முள்தாள் தாமரை,
 ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
 சேடல், செம்மல், சிறுசெங் குரலி,
 கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
 காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
 பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
 ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை,
 அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி, அவரை,
 பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
 வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
 தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,
 நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
 பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
 ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
 நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
 மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,
 அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
 மால்அங்கு உடைய மலிவனம் மறுகி...
     நாமும் மலர்களின் பெயர்களையும் மகத்துவத்தையும் அறிந்து, இறைவழிபாட்டில் பயன்படுத்துவோம்.
-- புலவர் வே.மகாதேவன்.
-- பூஜைக்குரிய மலரே வா...
-- தினமலர் பக்திமலர். மே 2, 2013. 

No comments: