Saturday, September 13, 2014

டிப்ஸ் கார்னர்.

*  பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
*  இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணை வீட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும்.
   இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும்.  பிரயாணத்துக்கு உகந்தது.
*  தேங்காய் வருத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணை இருக்கும்.  அதை நீக்க சிறிது நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.  மேல் பகுதியில்  
   எண்ணை படியும்.  அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*  கல் கம்மலில் எண்ணை இறங்கி விட்டால்,  அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு
   ஆவியில் வைத்தால்,  கம்மலில் இறங்கியிருந்த எண்ணை முழுவதும் துணியில் இறங்கி விடும்.
*  இட்லி மாவு புளிக்காமல் இருக்க, இரண்டு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் மாவுப் பாத்திரத்தில் குப்புற போடவும்.  இரண்டு நாட்களுக்கு மாவு
   புளிக்காமலும், பொங்காமலும் இருக்கும்.
*  கொஞ்சம் வசம்பு எடுத்து தட்டி  ரவா, மைதா, அரிசி ஆகியவை உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூக்சி, புழுக்கள் தலை காட்டாது.
-- கிருத்திகா,
--  தினமலர்.பெண்கள்மலர். ஆகஸ்ட் 17, 2013.   

No comments: