Monday, September 22, 2014

துவஜஸ்தம்ப ஆஞ்சநேயர் !

  சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலின் துவஜஸ்தம்பம் ஒரே கல்லாலானது.  தரைக்குக் கீழே சுமார் நாற்பதடி புதைந்தும்,  தரைக்கு மேல் சுமார் எண்பதடி உயரத்துடனும் காணப்படும்.  இது, தமிழகக் கோயில்களில் உள்ள மிகப்பெரிய துவஜஸ்தம்பங்களுக்குள் ஒன்று.  இதன் மேல் பகுதியில் சுமார் எட்டடி உயரத்தில் நின்ற கோலத்தில் அஞ்சநேயர் சேவை சாதிக்கிறார்.  இவரைச் சுற்றி மண்டபத்துடன் கூடிய அமைப்புள்ளதால்,  இந்த துவஜஸ்தம்பத்தை ஆஞ்சநேயர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஆகஸ்ட் 16 - 31, 2013.  

No comments: