Wednesday, September 3, 2014

வாலி கவிதாஞ்சலி!

வாலிபக் கவிஞர் வாலி வான்புகழ் எய்திவிட்டார்.  அந்தக் காவியக் கவிஞருக்கு, கவிதாஞ்சலி இங்கே...
யாரைச் சொல்வேன்?
உன்னை நான்...
ஜிப்பா அணிந்த
'ஷெல்லி ' என்பேன்
' ஷேக்ஸ்பியரின் '
தம்பி என்பேன்.

ஸ்ரீரங்கத்துக்
' கம்பன் ' என்பேன்
திருநீறு அணியும்
'ஜிப்ரான் ' என்பேன்.

' சீவல் ' மெல்லும்
சங்கம் என்பேன்
' சிலேடை'த் தமிழ்ச்
சிங்கம் என்பேன்.

வெள்ளை வேட்டி
' நியூட்டன் ' என்பேன்
வெண்பா பாடும்
' விட்மன் ' என்பேன்.

கவிதை எழுதும்
' பிட்மன் ' என்பேன்
' கற்பகம்  அவென்யூ '
' பிகாசோ ' என்பேன்.

இனிமேல் இப்படி
யாரைச் சொல்வேன்?
-- இளையகம்பன்.
-- ஆனந்த விகடன். 31.7.2013.  

No comments: