Sunday, September 7, 2014

" இங்கிதம் "

" இங்கிதம் என்றால் என்ன?"
    " நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார்.  தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார்.  அதை எப்படி உணர்த்துவது ?
     ' அம்மா ! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!' என்றேன்.  பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.
      புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம் !"
-- கவிப்பேரரசு வைரமுத்து , பதில்கள்.
--   ஆனந்த விகடன். 19.12.2012.  

No comments: