Friday, November 11, 2016

கண்ணீர் வராத வெங்காயம்.

* ஊறுகாய் பாட்டிலில் சில்வர் ஸ்பூன் போட்டு வைக்கக்கூடாது. அப்படிப் போட்டு வைத்தால், ஊறுகாய் விரைவில்
கெட்டுப் போய்விடும்.
* ரஸ்னா, சர்பத் கலக்கும்போது இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* பழைய வெள்ளி ஆபரணங்களைச் சில மணி நேரம் மோரில் போட்டுவைத்தால், பளிச்சென மாறிவிடும்.
* கண்ணாடி மேஜை கறையாக உள்ளதா? கடலை மாவு அல்லது டால்கம் பவுடரைத் தூவிப் பிறகு நன்றாகத்
துடைத்துவிடுங்கள். கறை நீங்கிவிடும்.
* வாஷ்பேஸினில் கறை படிந்துள்ளதா? கொஞ்சம் வினிகரைத் தெளித்து சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் கழுவினால்
பளபளக்கும்.
* பருப்புப் பொடியுடன் சிறிது கசகசாவையும் வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்பு, கூட்டு கெட்டியாக இருக்கும்.
* பொரியல் செய்யும்போது காரப்பொடிக்குப் பதிலாகத் தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை கூடுதலாக
இருக்கும்.
* வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை
நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வராது. தோலையும் எளிதில் உரிக்கமுடியும்.
-- குறிப்புகள் பலவிதம் பகுதியில் , எஸ்.மேகலா, சென்னை.
-- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று இணைப்பு. ஞாயிறு, நவம்பர் 9, 2014.

No comments: