Friday, November 4, 2016

ஒரு வரிச் செய்திகள்

* காசியில் 64 ஸ்நான கட்டங்கள் உள்ளன.
* சிவன், விஷ்ணு, ஆஞ்சநேயர் மூவர் சகஸ்ரநாமத்திலும் வரும் பெயர் சுந்தரர்.
* வில்லிப்புத்தூரார் தவிர ராமாயணம் எழுதியவர் பெருந்தேவனார்.
* காயத்ரி மந்திரத்தை கண்டறிந்தவர் விசுவாமித்திரர்.
* மதங்க முனிவரின் மாணவி சபரி.
* மகான்களின் திருஅவதார நாட்களை வர்தந்தி என்று குறிப்பிடுவார்கள்.
* அரசர்களாக இருந்து ஆழ்வார்களாக மாறியவர்கள் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்.
* தொண்டர் சீர் பரவுவார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் சேக்கிழார்.
* திருவெண்பாவை பாடல்கள் 20 இயர்றியவர் மாணிக்கவாசகர்.
* பாசரப்படி ராமாயணத்தைத் தொகுத்தவர் பெரியவாச்சான் பிள்ளை.
* விஷ்ணு சகஸ்ரநாமத்தை இயற்றியவர் சனகாத்யர். மகாபாரதத்தில் இதை இணைத்தவர் பீஷ்மர். கேட்டவர் தருமபுத்திரர்.
* ஜடாயுவின் சகோதரன் சம்பாதி.
* விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழவார் என அழைக்கப்பட்டார்.
* மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் நவக்கிரகங்களும் இருக்கின்றன.
* இந்தியாவிலேயே மிக நீளமான சன்னதித் தெரு உள்ள இடம் திருநெல்வேலி.
* கர்னாடகாவிலுள்ள மூலுபாகுல் என்னும் இடத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கு தாழம்பூ அணிவிக்கிறார்கள்.
* பூதங்குடி என்னும் ஊரில் சீதாதேவிக்கு கோயில் உள்ளது.
* தாலி பாக்கியம் நிலைக்க காண வேண்டிய விழா சுசீந்திரம் ஆருத்ரா தரிசன விழாவாகும்.
-- பத்மா வெங்கற்றாமன், ரெட்டிப்பாளயம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜுன் 16- 30, 2014.

No comments: