Monday, November 7, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

* திருமாலுக்குரிய வைணவ ஆகமம்ங்கள் ... பாஞ்சராத்ரம், வைகானசம்.
* மகாபாரதத்தை வியாசர் விருந்து என்னும் பெயரில் எழுதியவர் ... ராஜாஜி.
* இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் ... ராமசரித மானஸ்.
* ராமர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் எழுதியது ... பெருமாள் திருமொழி.
* திருமாலுக்கு விரதம் இருக்க உகந்த நட்சத்திரங்கள் ... திருவோணம், ரோகிணி.
* எத்திசை நோக்கி நின்று திருநீறு பூச வேண்டும் ... கிழக்கு, வடக்கு.
* ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்று பாடிய தலம் ... மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்.
* விபூதி என்பதன் பொருள் .... மேலான செல்வம்.
* 'தாசமார்க்கம்' என்னும் அடிமை நெறியில் சிவனை அடைந்தவர் ... திருநாவுக்கரசர்.
* அக்னியைப் பற்றிக் கூறும் நூல் ... ஆக்னேய புராணம்.
-- பக்திமலர். அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

No comments: