Saturday, November 5, 2016

ரிஷபாந்திகர்

ரிஷப வாகனத்தின் மீது சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்தால், அவர் ரிஷபாரூடர். ரிஷபவாகனத்திற்கு அருகில் நிற்பதுபோல் காட்சி தந்தால் ரிஷபாந்திகர் என்று சொல்வார்கள்.
-- எஸ்.மதுமிதா, பெருந்துறை.
கிருஷ்ணன் வணங்கும் ஆறு பேர்!
'நான் ஆறுபேரை வணங்குகிறேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். யார் அந்த ஆறு பேர் தெரியுமா?
ப்ராதஸ்நாதி ( அதிகாலையில் குளிப்பவர் ). அச்வத்வசேவி ( அரசமரத்தை வணங்குபவர்). த்ருணாக்னிஹோத்ரி ( மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன்). நித்யான்னதாதா ( நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் ). சதாபிஷேகி ( நூற்றாண்டு விழா செய்துகொண்டவர் ). பிரம்மஞானி ( இறைவனை உணர்ந்தவர் ).
-- பைரவி, பெருந்துறை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஜுன் 16- 30, 2014.

No comments: