Saturday, September 12, 2009

அறிஞர் .

அண்ணாதுரை அறிஞர் .
எண்ணாத் துறைநாடி
எண்ணிப் பிற்காலம்
ஏற்பச் செய்தான்
அண்ணாத் துரை ' அறிஞன் '
சொற்பெருக்கில் நற்றொடர்கள்
ஆய்ந்தே டுத்துப்
பண்ணாத் துறைஎன்ன ?
வீழ்ந்தபுகழ் மீட்டான்
பார்ப்பனத் தீ
நண்ணாமற் செய்தான்
திராவிடர்க்கு வாழ்வளித்தான்
நன்றே நன்றே !
( அண்ணா அவர்கட்கு ' அறிஞர் ' பட்டம் கொடுத்தவர் ' கல்கி ' என்று சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள் . அண்ணாவை அவர் ' தென்னாட்டு பெர்னாட்ஷா ' என்றுதான் பாராட்டினார்.
முதன் முதலில் ' அறிஞர் ' எனக் குறிப்பிட்டுப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனே யாவார் . அவருடைய கவிதைதான் மேலே உள்ளது .
--- மீண்டும் கவிக்கொண்டல் , ஏப்பிரல் -- 2009 . என்ற திங்கள் இதழிலிலிருந்து

No comments: