Wednesday, September 30, 2009

vஒரு மனிதர் !

மதிக்கும் ஒரு மனிதர் !
அணுசக்தி விஞ்ஞான மேதை டாக்டர் பாபா அமரத்துவம் அடைந்த அன்று கூட ' ட்ராம்பே அணுசக்தி நிலையம் ' விடுமுறை விடப்படாம செயல்பட்டுக் கொண்டிருந்தது .
அதுக்கு காரணம் அவரேதான் . யாருடைய மரணமும் ட்ராம்பே அணுசக்தி நிலையதின் பணிகளைத் தடைசெய்து விடக்கூடாதுன்னு டாக்டர் பாபா தன் மரணத்துக்குச் சில நாள் முன்பே தெரிவிச்சிருந்தாராம் . அவரோட கோரிக்கையை ஏற்றே இன்றளவும் அவரது நினைவு நாள்ல கூட அணுசக்தி நிலையத்துக்கு விடுமுறை கிடையாதாம் .
இதை அறிவிப்பாகவே அணுசக்தி நிலையத்தில் எழுதி வச்சிருக்காங்க . உழைப்போட உன்னதத்தை மதிக்க அந்த மாமனிதரை எப்பவும் எல்லொரும் மதிக்கணும் .
--- ஒருத்தர் டாக்டர்கிட்ட வந்து , " டாக்டர்.... தினம் வேலைக்காக பஸ்ல போகும்போதெல்லாம் ஒரே தூக்கமா வருது டாக்டர் . என்னால கண்ட்ரோலே பண்ண முடியல"ன்னாரு .
உடனே டாக்டர் , " தூக்கம் வந்தா கொஞ்ச நேரம் அப்படியே சாஞ்சி படுத்து தூங்குங்க . உடம்புக்கு ரெஸ்ட்தானே " ன்னு சொல்ல,
அதுக்கு வந்தவர் , " நான் தூங்க ஆரம்பிச்சா , அப்ப பஸ்ஸை யாரு டாக்டர் ஓட்டறது ?" ன்னாராம் .
---பாக்யராஜ் , பாக்யா . மே 29 -- ஜூன் 4 ; 2009 .

No comments: