Saturday, February 6, 2010

நோபல் பரிசு ...!

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு 108 ஆண்டு வரலாறு கொண்டது . டைனமைட் வெடிமருந்து கண்டுபிடித்த சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபர் ஆல்பிரிட் நோபல் எழுதி வைத்த உயிலின்படி , 1901 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன .
நோபல் பரிசு என்பது ரூ. 7 கோடி பரிசுப்பணம் , பாராட்டுச் சான்றிதழ் , தங்கப்பதக்கம் அடங்கியதாகும் . சுவீடன் தலைநகர் ஸ்டா ஹோமில் டிசம்பர் 10 ம் தேதி நடக்கும் விழாவில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படும் .
நோபல் இந்தியர்கள்
..................................................................................................................................................................
பெயர் ஆண்டு பிரிவு
................................................................................................................................................................
ரவீந்திரநாத் தாகூர் 1913 இலக்கியம்
சந்திரசேகர் வெங்க ட்ராமன் 1930 இயற்பியல்
ஹர்கோபிந்த் கொரானா * 1968 மருத்துவம்
சுப்ரமணியம் சந்திரசேகர் * 1983 இயற்பியல்
அன்னை தெரசா * * 1979 உலக அமைதி
அமர்த்தியா சென் 1998 பொருளாதாரம்
ஆர். கே. பச்சோரி 2007 உலக அமைதி
வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் * 2009 வேதியியல்.
* இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் .
* * அல்பேனியா நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்றவர் .
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான வித்யாதர் சூரஜ் தைபால் 2001 ம் ஆண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றார் . 2007 ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை பருவநிலை அமைப்புக்கான ஐ . நா . வின் சர்வதேச அமைப்பின் தலைவராக இருந்த ஆர். கே. பச்சோரியும் , அனெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோரும் பகிர்ந்துகொண்டனர் .
--- தினமலர் . 08 - 10 - 2009 .

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவல்....

க. சந்தானம் said...

அன்பு சங்கவி அவர்களுக்கு , மிக்க நன்றி !