Monday, February 8, 2010

அடைமழை !

அடைமழையை ஆங்கிலத்தில் ' raining cats and dogs ' என்று சொல்கிறோம் . ஒரு காலத்தில் பிரிட்டனில் , லண்டன் போன்ற நகரங்களில் சீரான சாக்கடைகள் கிடையாது . பெருமழை பொழிந்தால் போச்சு ! தெருக்களில் அலையும் நாய்களும் , பூனைகளும் நீரில் மூழ்கி இறந்துவிடும் . மழைநீர் வடிந்த பிறகு ஆங்காங்கே தெருக்களில் அவற்றின் உடல்கள் கிடக்கும் . ஆகவே , பெரிய மழையை ' It is raining - ( there are dead ) cats and dogs ' என்பார்கள் .
' இல்லை ! இந்தச் சொற்றொடர் பண்டைய நார்வே நாட்டின் புராணத்திலிருந்து வந்தது . Norse என்கிற அந்த மொழியில் புயலுக்கு நாய் , மழைக்கு பூனை என்று உருவகப்படுத்தி இருந்தார்கள் .' என்கிறார்கள் .!
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 .