Monday, February 8, 2010

செய்திகள் .

* 507 காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம் , தென்னாப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .
* உயிர் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு , அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒருவர் வேடிக்கையாக அது காமத்தால் தொற்றிக்கொண்ட நோய் ( ' life is a sexually transmitted disease ' ) என்றார் .
* ' வேகமாகப் போக விரும்பினால் , தனியாகப் பயணம் செய் . தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் ' என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச் சொல்லப்படும் வாக்கியம் .
* எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு . பின்பக்கமாகத் திரும்பி
வெற்றிக்கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான் .
* சங்கரா பரணம் ராகத்தில் , ' ஜனகணமன ' பாடலுக்கு இசை அமைத்தவர் நேதாஜியின் படையில் பணியாற்றிய கேப்டன் ராக்சிங்
* மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறந்த கானகப் பகுதிக்கு ' மௌனப் பள்ளத்தாக்கு ' என்று பெயர் .
* மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப் படுத்தி உறவுகொள்வது ( மேரிட்டல் ரேப் ) , மனைவியைக் கணவனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது ( டொமஸ்டிக் வயலென்ஸ்.) எனப்படும் .
* பறவைகளுக்கு ( வாத்து , அன்னம் , நெருப்புக் கோழி தவிர்த்து ) ஆண்குறி கிடையாது . க்ளோயேகா ( cloaca ) என்கிற ' சமச்சீர் பகுதி ' யினால் தேய்த்துக்கொள்ள வேண்டியதுதான்
* என்னதான் கனவு என்றாலும் , கண் முழித்த ஐந்தாவது நிமிடமே 50 % கனவுகள் மறந்துவிடும் . 10 நிமிடம் ஆனால்
90 % கனவு காலி ..
* இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Nocturnal Enuresis என்று குறிப்பிடுவோம் . இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான் .

No comments: