Tuesday, October 4, 2011

மூளை வளர்கிறது !

திட்டமிடல், முடிவு எடுத்தல் என 40 வயது வரை மூளை வளர்கிறது .
மனித மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்துடன் முடிவடைவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பப்ப்ட்டது . ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் அந்த நம்பிக்கையில் உண்மையில்லை எனத் தெரிந்தது . மனித மூளையின் பல பகுதிகளில் மாறுதல்களும், வளர்ச்சியும் 30 முதல் 40 வயது வரை நீடிக்கிறது எனத் தெரிகிறது .
முடிவு எடுத்தல், திட்டமிடுதல், புரிந்து கொள்ளுதல், முறையற்ற சமூக நடத்தைக்கான எண்ணம் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் ஈடுபடும் மூளையின் முன்பகுதியில் வளர்ச்சி ஏற்படுகிறது . கருவில் இருக்கும்போதே வளரத் தொடங்கும் இந்தப் பகுதி, குழந்தைப் பருவத்திலும் வளர்கிறது . வாலிப வயதில் மறுசீரமைப்பு செய்து கொள்கிறது . பிறகு, மீண்டும் வளர்ச்சியை தொடரும் அது 40 வயது வரை கூட நீடிக்கும் என்றும், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியர் சாரா ஜெய்னே பிளக்மோர் தெரிவித்தார் .
--- தினகரன் , 20 டிசம்பர் 2010 .

No comments: