Wednesday, October 19, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...


* ' தேங்காயைத் துருவி ஃப்ரீஸரில் வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ' என்று நமக்குத் தெரியும் . ஆனால், உபயோகிப்பதற்கு எடுக்கும்போது அது இறுகாமல் இருக்க வேண்டுமே..! முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியை வெறுமனே நன்கு சூடாக்கி, அடுப்பை அணத்துவிடுங்கள் . துருவலை அதில் பொட்டு, நாலைந்து முரை புரட்டி, ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வையுங்கள் . எடுக்கும்போது உதிர் உதிராக இருக்கும் . கெட்டியாக இருந்தாலும் ஸ்பூனால் லேசாக சுரண்டும்போதே பூப்பூவாக உதிரும் !
* மட்டர் பனீர், சன்னா சுண்டல் முதலியன செய்ய திடீர் ஐடியா தோன்றுகிறது . ஆனால், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றை முன்கூட்டியே ஊறவைக்கவில்லை கவலையை விடுங்கள் . வெறும் வாணலியில் அவற்றைப்போட்டு, ஐந்தாறு நிமிடங்கள் நன்கு வறுக்கவும் . பின்னர், இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடா போட்டு, உப்பு சேர்க்காமல் குக்கரில் ஐந்தாறு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்தால்... நன்கு வெந்திருக்கும் . அதிகப்படி தண்ணீரைக் கொட்டிவிடாமல் தாளிப்புடன் சுண்ட விடவும் .
--- அவள் விகடன் . 14 . 1. 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி .

No comments: