Friday, October 14, 2011

வள்ளுவரும் , வாசுகியும் .

வாசுகி இறந்த சோகம் தாளாது வள்ளுவர் பாடிய பாடல் இது :
' அடிசிற்கினியாளே
அன்புடையாளே
படிசொல் தவறாத
பாவாய் ! -- அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழூஉம்
பேதையே ! போதியோ ?
என் தூங்கும் கண் இரா .'
' இனிய உணவுகளைச் சமைத்து தந்தவளே ! அன்பு நிறைந்தவளே ! என் பேச்சைத் தட்டாதவளே ! நான் தூங்கும்வரை என் பாதங்களை வருடிக் கொடுத்து, அதன் பின் தூங்கி, நான் எழும் முன் எழுபவளே ! என்னைப் பிரிந்து சென்றுவிட்டாயே ! கொல்கிறதே வேதனை , தொலைந்ததே என் தூக்கம் ' என்றெல்லாம் சோககீதம் பாடி மனைவிக்கு அஞ்சலி செலுத்துகிறார் .
--- தினமலர் . 26 . 12 . 2010 .

1 comment:

Unknown said...

Hi please let me know in where he wrote these lines.. proper source please..want to read..thank you.