Saturday, October 29, 2011

சிமென்ட்.


ஒளி ஊடுருவும் சிமென்ட்.
இத்தாலியை சேர்ந்த ' இத்தாலியன் சிமென்ட் குரூப் ' என்ற நிறுவனம் ஒளி ஊடுருவும் சிமின்டை கண்டுபிடித்துள்ளது . நிறமற்ற பிளாஸ்டிக் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சிமென்ட் கலவையை கொண்டு கட்டடம் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையிலான இடைவெளி மூலம் வெளிச்சம் ஊடுருவும் . இதனால், சுவருக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எளிதாக பார்க்கலாம் .
ஒளி ஊடுருவும் வகையில் டிரான்ஸ்பிரன்ட் சிமென்ட் கலவை, நிறமற்ற பிளாஸ்டிக் கலவையால் ஆனது . இந்த கலவையை கொண்டு சுவர் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் கலவை இருப்பதே தெரியாது . தொலைவில் இருந்து பார்ப்பதற்கு இரண்டு கற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதுபோல் தெரியும் . ஒளி ஊடுருவும், நிறமற்ற கண்ணாடி போன்ற இந்த கலவையால் கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருந்து அறைக்குள் ஒளி ஊடுருவும். இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது . இதனால் கணிசமான அளவு மின்சாரம் சேமிக்கமுடியும் .
--- தினமலர் .ஜனவரி 9 , 2011 .

No comments: