Monday, October 24, 2011

ஆண் விலங்குகள் !


பொதுவாக, ஆண் விலங்குகள் அனைத்துக்கும், இனப்பெருக்க உறுப்புக்குள் பாக்குலம் ( baculum ) என்ற ஓர் எலும்பு இருக்கும் . இந்த எலும்புதான் விறைப்புத் தன்மையை நீட்டிக்க உதவுகிறது . சிம்பன்சி மாதிரியான நம் நெருங்கிய உறவுக்கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது . ஆனால், மனித ஆண்களுக்கு மட்டும் பாக்குலம் இல்லை . ஏன் ? பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக மனிதப் பெண், பாக்குலம் இல்லாத ஆண்களாகப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததில்.... கடைசியில் மனித ஆண், பாக்குலம் இல்லாதவனாகவே போய்விட்டான் . எலும்பின் உபயத்தால் விறைப்பு ஏற்படுவதைவிட, எலும்பே இல்லாதபோதும் விறைப்புடன் இயங்குவதுதான் நிஜ வீரியத்தின் வெளிப்பாடு . அதனால் மனிதப் பெண்கள் எல்லோரும் எலும்பு இல்லாத ஆண்களுடன்கூடி, அவர்களின் தரத்தை வித்தியாசப்படுத்த ஆரம்பித்தனர் . ஆணும் காலப்போக்கில் அது இல்லாமலேயே விறைப்புடன் தன்மையைப் பெற்றான் .
---' உயிர்மொழி ' .தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 17 . 11 . 2010 .

No comments: