Monday, June 2, 2014

சுந்தரகாண்டம்.

சுந்தரகாண்டம். பாராயணம் செய்யலாம் !
     ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம் சுந்தரகாண்டம்..  இது அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம்.  24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 885 சுலோகங்கள்.  68 அத்தியாயங்கள்.  வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.
     ஐந்தே நிமிடங்களில் சுந்தரகாண்டத்தை படிக்க அதன் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதைப் படித்தாலே சுந்தரகாண்டம் முழுமையாக படித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
     நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் பெரிவாச்சான்பிள்ளை என்னும் மகான் தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம் என்பதில் கீழ் வருமாறு சுந்தரகாண்டம் உள்ளது :
' சீர் ஆரும் திறல் அனுமன் மா கடலைக்
கடந்து ஏறி,
மும்மதின் நீள் இலங்கை புக்கு,
கடிகாவில் வார் ஆரும் முளை மடவாள்
வைதேகிதனைக் கண்டு,
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு
அருளாய் :
அயோத்தி தனில் ஓர் இடவகையில்
எல்லியம்போது இனிது இருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு
ஆர்த்ததுவும்
கலக்கிய மாமனத்தனனாய் கைகேயி வரம்
வேண்ட
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும்
மறாது ஒழிய,
" குலக்குமரா ! காடுறைய போ !" என்று விடை
கொடுப்ப,
லக்குமணன் தன்னோடும் அங்கு
ஏகியதும்,
கங்கைதனில் கூரணிந்த வேல்
வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை
கொண்டதுவும்,
சித்திர கூடத்து இருப்ப பரத நம்பி
பணிந்ததுவும்,
சிறு காக்கை முலை தீண்டி மூவுலகும்
திரிந்தோடி,
" வித்தகனே! இராமா! ஓ! நின்
அபயம் " என்ன,
அத்திரமே அதன் கண்னை அறுத்
ததுவும்,
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது
விளையாட...
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து
எம்பிரான் ஏக,
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்,
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்,
" ஈது அவன் கை மோதிரமே!" என்று,
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கொண்டு,
" அனுமான்! அடையாளம் ஒக்கும்" என்று,
உச்சி மேல் வைத்து உகக்க;
திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன்
மாக்கடிகாவை இறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு,
அன்பினால் அயோத்தியர் கோன் தளிர்
புரைய்யும்,
அடி இணை பணிய! '
-- தேவராஜன்.
-- தினமலர்.வாரமலர். ஜூலை 28, 2013.  

No comments: