Sunday, June 29, 2014

தெரிஞ்சுக்கோங்க...

*  திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் இரண்டு புலவர்கல்.  திருத்தணி விசாகப்பெருமாளையர்,  யாழ்ப்பாணத்தைச்
   சேர்ந்த ஆறுமுக நாவலர்.  இந்த ஒப்பற்ற தொண்டினை இவர்கள் செய்யாவிடில் திருக்குறள் அழிந்தே போயிருக்கும்.
*  காலையில் பிரட் ஆம்லெட், மதியம் பிரைட் ராஸ்; இரவில் நூடுல்ஸ், பீட்சா, இடையிடையே பர்கர், பப்ஸ், சிப்ஸ் என இன்றைய தலைமுறை மேற்கத்திய
   உணவுப்பழக்கத்திற்கு மாறி வருகிறது.  இவற்றை கொஞ்சமாக சாப்பிடாலே போதும், அதிக கலோரிகள் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம்
   பரவியிருப்பதே இதற்குக் காரணம்.  இப்படி நிலையில் தென்னிந்திய உணவான இட்லி, சாம்பாரில்தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன என்று ஆய்வில்
   கண்டறியப்பட்டுள்ளது.
--  தினமலர். வாரமலர். செப்டம்பர் 15, 2013. 

No comments: