Saturday, June 21, 2014

பழத்துக்கு பஞ்ச கவ்யா.

  மாட்டுச்சாணம்,  கோமியம்,  தயிர்,  பால்,  நெய் ஆகிய பொருட்களை ஒன்றாக சம அளவு கலந்து 21 நாட்கள் பாத்திரத்தில் பதப்படுத்த வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட கெட்டியான திரவத்தை பயிர்கள்மேல் தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாய்ச்சும் கால்வாயில் கலந்து விடலாம்.  இது பயிர்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்து.
     குறிப்பாக,  வாழை மரத்தில் குலை தள்ளிய,  காய்கள் சற்று வளர்ந்த நிலையில் வாழைப்பூவை ' கட் ' செய்து எடுக்கும் பகுதியில் ஒரு பாலிதீன் கவரில் பஞ்சகவ்யத்தை கட்டி விட வேண்டும்.  அப்படி கட்டும்போது கீழிருந்து மேல் நோக்கி உள்ள எல்லா பழங்களுக்கும் ஒரே மாதிரியான நல்ல சுவை கிடைக்கும்.
-- தினமலர் 13- 9-2013. 

No comments: