Sunday, June 8, 2014

இதையும் தெரிஞ்சுக்கலாம்!

*  மரம் நடுதல் என்பது விருட்சப் பிரதிஷ்டை எனப்படும்.
*  அரச மரம்  --  அசுவத்தம் எனப்படும்.  மும்மூர்திகளின் வடிவம்.  விநாயகரின் பஞ்சபூத சொரூபங்களில் ஒன்று.
*  ஆலமரத்தைச் சிவமாகவே வழிபடுவர்.  ஆறுகள் கூடும் இடங்களில் சிவபெருமான் ஆலமர வடிவில் உள்ளான் என்பர்.
*  வேம்பு  --  அன்னையின் அடையாளம்.
*  கடம்பு  --  முருகனின் அடையாளம்.
* ஸ்தல மரம் கோயிலின் முக்கியமான அங்கம்.  முன்பு அங்கு அந்த மரங்கள் இருந்ததைக் காட்டும் அடையாளம் அது.
*  குயிலுக்கு இந்திர கோகிலம் என்ற பெயர் உண்டு.
-- புலவர் வே. மகாதேவன்.
--    தினமலர்.  பிப்ரவரி 7, 2013.

No comments: