Tuesday, August 11, 2015

ப்ரதோஷ வேளை !

ப்ரதோஷ வேளையில் அவதரித்த நரசிம்மரையும் வழிபடுவது விசேஷம் என்று பலர் கூறுகிறார்கள்.  உண்மைதானா?
     பொதுவாக ப்ரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது.  ' நிருசிம்மம் ராகவம் விநா ' என்பது சாஸ்திரம்.  அதாவது ப்ரதோஷ வேளையில் நரசிம்மரையும், ஸ்ரீராமபிரானையும் தவிர மற்ற கோலங்களில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கக் கூடாது என்பது பொருள்.  மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை.  வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.
--  அறிவோம்!  தெளிவோம்! .  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011.

No comments: