Thursday, August 27, 2015

பாதரசம் !


     கருவில் இருக்கும் குழந்தைகள், மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், முடக்கு வாதம், சிறுநீரகம் செயலிழப்பு, அல்ஸெய்மர் நோய், பார்வை, பேச்சுத்திறன் பாதிப்பு, ஒவ்வாமை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பாதரச மாசுபாட்டால் ஏற்படும்.  எனவே, பாதரசத்தைக்கொண்ட மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக வேறு கருவிகளைப் பயன்படுத்த உலகமெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     ஜப்பான் நகரமான மினமாட்டாவில் 1956 -ம் ஆண்டு முதன்முதலாகப் பாதரசத்தால் ஏற்படும் நோய் கண்டறியப்பட்டது.  இதனால் பாதரசம் மூலம் உருவாகும் நோய்கள் ' மினமாட்டா நோய் ' எனப்படுகின்றன.
-- ந.வினோத் குமார். சூழல் சீர்கேடு. உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013.                            

No comments: