Sunday, May 3, 2009

காந்திஜி சமாதி !

காந்திஜியின் சமாதியில் ஆண்டுதோறும் ராணுவ மரியாதை நடத்தப்படுகிறதே , இது சரியா ?
' சரியல்ல என்கிறார் காந்திஜியின் அந்தரங்கச் செயலாளர் திரு . பியாரிலால் . ' அகிம்சா மூர்த்தியின் சமாதியில் ராணுவ வீரர்கள் தளவாடங்களுடன் மரியாதை செய்வது தவறு . இது காந்திஜியின் கொள்கைக்கு முரணானது ' என்று ' மகாத்மா காந்தி நூற்றாண்டுகள் ' என்ற நூலில் எழுதியிருக்கிறார் அவர் .
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் கரியப்பாவின் கருத்தும் இதுவேதான் . இந்தப் பழக்கத்தைக் கை விடுமாறு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைந்த ஒரு கமிட்டி , அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள இருந்ததாம் . ஆனால் , கேட்கப்படவில்லை .
இது பற்றி ராஜாஜியின் கருத்து என்ன ?
" இத்தனை ஆண்டுகளாக இது நடக்கும்போது நாம் ஒன்றும் செய்வதற்கில்லை . ஒரு நாடு ராணுவத்தை வைத்துக்கொண்டு இருக்கும்போது , நாட்டின் பெரிய தலைவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் ராணுவம் கலந்துகொள்வது இயல்பே என்றுதான் எனக்குப் படுகிறது " என்கிறார் அவர் .
இவ்விஷயத்தில் மவுண்ட்பேட்டன் பிரபு என்ன கருதுகிறார் ?
" அகிம்சா மூர்த்தி காந்திஜிக்கு ராணுவ மரியாதை தேவையில்லை !" என்கிறார் .
--- ம . சிவராமன் , லண்டன் . ஆனந்தவிகடன் . 27 - 01 - 1974 .

No comments: