Wednesday, May 27, 2009

எஸ் . எம் .எஸ் .

---மில்டனுக்குக் கண்பார்வை கிடையாது . ஆனால் , அவர் எழுதிய ' பாரடைஸ் லாஸ்ட் ' டைப் படிக்காத கண்களே கிடையாது .
--- டிக் ஷனரியை தயாரித்த ஜான்சன் பள்ளிக்கூடத்தில் மந்தமான மாணவனாக இருந்தவர் .
--- எடிசனுக்குக் காது சரியாக கேட்காது . ஆனால் , அவர் கண்டுபிடித்ததில் ஒன்றுதான் தொலைபேசி .
--- 2 லட்சம் கோடி டன் பனிக்கட்டிகள் அண்டார்டிக்கா , அலாஸ்கா , கிரீன்லாந்து ஆகிய கடல் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் உருகி விட்டன .
--- 1, 30, 000 லட்டுகள் ஒவ்வொரு நாளும் திருப்பதியில் தயாரிக்கப்படுகின்றன .
--- 174 உயிர் காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .
--- 50 லட்சம் பேர் , உலகில் ஆண்டுதோறும் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர் .
--- 33 லட்சம் கி. மீ . -- இந்தியாவில் உள்ள சாலைகளின் தூரம் .
--- 22 தொல்பொருள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் உள்ளன .
--- 4,80, 000 ஏக்கர் கோயில் நிலங்கள் , தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது .
--- 591 கடலோரக் கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன.
--- 2,500 மொழிகள் , உலகில் அழியும் அபாயத்தில் இருப்பதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது .
--- கடிகாரத்திலுள்ள பாலன்ஸ் வீல் ஒருநாளில் 4,32, 000 தடவை முன்னும் பின்னும் நகர்கிறது .
--- 1900- ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இத்தாலியின் வெனிஸ் நகரம் 25 சென்டி மீட்டர் வரை புதைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் .
--- கண்களைச் சிமிட்டாமல் தவளையால் தன் இரையை விழுங்கவே முடியாது . ஏனெனில் , தொண்டையின் திறவு கோல் அதன் கண்ணில் உள்ளதாம் .
--- ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்பவர்தான் 1888-ல் காமிராவைக் கண்டுபிடித்து விற்பனை செய்தபோது , அவர் செய்த விளம்பரம் மக்களைக் கவர்ந்தது . அந்த விளம்பர வாசகம் : YOU PRESS THE BUTTON , WE DO THE REST.
--- 1,390 கோடி செலவில் , உலகம் வெப்பமாவதைப் பற்றி ஆராய்வதற்காக அமெரிக்கா உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது !
--- குழந்தைகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதற்கு child sexual abuse -- என்று பெயர் .
--- ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் அதிகாரிகள் , இந்தியாவில் முதன்முறையாகப் பார்வையற்றவர்களும் வாக்களிக்க வசதியாக பிரெய்லி முறையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை அமைத்துள்ளனர் .
--- குதிரைகள் நின்றுகொண்டுதான் தூங்கும் .
--- எந்த ஒரு உடற்பயிற்சியையும் நாம் நிறுத்திய 48 மணி நேரத்துக்குள் இயற்கையான நம் உடல் வடிவம் , மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கி விடும் .

No comments: