Thursday, May 28, 2009

ஊனம் ஒரு தடையில்லை .

சராசரி மனிதன் ' கடவுளே , எனக்கு வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள் ' என்று பிரார்த்தனை செய்வான் .
தன்னம்பிக்கையுள்ள மனிதனோ , ' கடவுளே , எந்தப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தியை எனக்குக் கொடு ' என்று பிரார்த்தனை செய்வான் . நீங்கள் தன்னம்பிக்கையுள்ள மனிதனாக இருங்கள் .
' மூச்சு விடும் ' வாட்ச் !
மிக வேகமாகப் பாதிக்கப்பட்டுவரும் உலக சுற்றுச்சூழல் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி . ஜேம்ஸ் கெர்ஷா, சாட் கார்ன் என்ற இருவர் உருவாக்கியிருக்கும் ' ஈகோ 2 ' என்ற கைக்கடிகாரம் கார்பன் - டை - ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடுகிறது . இயக்க ஆற்றலில் இயங்கும் இந்தக் கைகடிகாரம் , குறைந்தபட்சம் இதை அணிந்திருக்கும் நபர் வெளியிடும் கார்பன் - டை - ஆக்ஸைடையாவது உள்ளிழுத்துக் கொண்டு உலகத்துக்கு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்கும் . இந்தக் கைகடிகாரத்தை அணிவதன் மூலம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தனது பங்கை கஷ்டமின்றி அளிக்க முடியும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள் . அதிகமானோர் இதை அணியும்போது பெருமளவில் நல்ல தாக்கம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர் .
--- தினத்தந்தி , குடும்பமலர் .( மும்பை பதிப்பு ), 08 - 02 - 2009 .

No comments: