Saturday, May 23, 2009

பலன்கள் .சிந்தனை .

விளக்கேற்றுதல் பலன்கள் .
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் .
* ஒரு முகம் ஏற்றுவது ---- மத்திய பலன் .
* இரு முகம் ஏற்றுவது ---- குடும்ப ஒற்றுமை .
* மூன்று முகம் ஏற்றுவது -- புத்திர சுகம் .
* நான்கு முகம் ஏற்றுவது -- பசு , பூமி லாபம் .
* ஐந்து முகம் ஏற்றுவது ---- ஐஸ்வர்யம் .
மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அல்லது வெள்ளி , பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது .
--- தினத்தந்தி , 16 - 09 - 2008 .
வாரியாரின் சிந்தனை .
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார் . அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , " நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? " என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , " ஊர் கோடியில் இருக்குது ! " என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள் .
உடனே , " ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர் .அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , " இதோ இங்கே இருக்குது... " என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு .
அசைவம் கூடாது என்ற கருத்தை முன்வைத்து அவர் இப்படி பேசியது , சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது .
--- தினத்தந்தி , 03 - 06 - 2008 .

No comments: