Thursday, May 14, 2009

காந்திஜி பொருட்கள் ஏலம் .

காந்திஜி பொருட்கள் ஏலம் .
தடுக்க கட்சிகள் கோரிக்கை
நம்நாட்டின் சுதந்திரத்திற்குக்காக பாடுபட்ட காந்திஜி அணிந்திருந்த கண்ணாடி , இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருக்கும் வாட்ஸ் ஆகியவை அவரின் நிரந்தர அடையாளங்களாகும் . ராணுவ அதிகாரி கர்னல் எஸ். ஏ . ஸ்ரீ திவான் நவாப் என்பவருக்கு 1930ம் ஆண்டு தனது கண்னாடியை கொடுத்து விட்டார் .
அதே போல் , அவர் அணிந்திருந்த செருப்புகளை லண்டனில் உள்ள இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒருவருக்கு 1931ம் ஆண்டில் கொடுத்துவிட்டார் . தன்னுடைய ' பாக்கெட் வாட்ச் ' சை பேத்தி அபா காந்திஜியிடம் கொடுத்தார் .
இந்நிலையில் இந்த பொருட்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பிளேட் , கிண்ணம் போன்ற அனைத்தும் லண்டனில் 04 ,05 --03 - 2009ம் தேதிகளில் ஏலத்துக்கு வருகின்றன என அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ' ஆண்டிகோரம் ஆக்ஸனீர்ஸ் ' ஏலமையம் அறிவிதுள்ளது . .
இந்த பொருட்கள் 30 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது இந்திய பணத்தில் 21 லட்ச ரூபாய் ஆகும் .
இதற்கிடையே இந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு நம்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது . காந்திஜி பயன்படுத்திய பொருட்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிவித்தியாசம் பாராமல் எழுந்துள்ளது .ஏலத்தில் அரசு கலந்துகொண்டு அதை வாங்கி , நம் நாட்டுக்கு கொண்டு வந்து மியூசியதில் வைக்க வேண்டும் என்றும் , கட்சி தலைவர்கள் கோரி உள்ளனர்
இந்திய பாரம்பரியம் மிக்க அந்த பொருட்கள் நம் தாய் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் , நம் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களான இந்த பொருட்களை நாம் திரும்ப பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் , நம் அன்புக்குரிய காந்திஜி பயன்படுத்திய மதிப்பு வாய்ந்த பொருட்களை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும். கோரி உள்ளனர் .
--- தினமலர் .15 -02 - 2009 . மற்றும் 01 -03 -2009 .
இந்தியாவுக்கு ' சூப்பர் ' நிபந்தனை .
காந்திஜி பொருட்களை திரும்ப பெற இந்தியாவுக்கு ' சூப்பர் ' நிபந்தனை .
காந்திஜியின் அபூர்வ பொருட்கள் ஏலம் போவது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று காந்திஜி பேரனும் , சமூக ஆர்வலருமான துஷார் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார் . ஏலத்தில் பங்குபெற்று காந்திஜி பொருட்களை மீட்போம் என்று பிரபல ஓட்டல் உரிமையாளர் சந்த் சிங் சத்வால் உட்பட சில இந்திய கோடீஸ்வரர்கள் முன்வந்தனர் .
இந்நிலையில் , ஒரேஒரு நிபந்தனையுடன் காந்திஜி பொருட்களை இந்தியாவிடம் தரத் தயார் என்று ஓடிஸ் திடீரென்று அறிவித்துள்ளார் .இந்திய உள்நாட்டு உற்பத்தி தொகையில் 5 சதவீதத்தை கொண்டு ஏழைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தால் 5 பொருட்களையும் தானமாகவே தருவேன் என்று ஓடிஸ் நேற்று தெரிவித்தார் . இதற்கிடையே , காந்திஜி ரத்த பரிசோதனை அறிக்கையும் விடுதலை போராட்டத்தின் போது மாணவர்களுக்கு அவர் அனுப்பிய தந்தியும் தன்னிடம் இருப்பதாக ஓடிஸ் தெரிவித்தார் .--- தினமலர் . 04 - 03 - 2009 .
தொழில் அதிபர் விஜய் மல்லையா .
பெங்களூர் , மார்ச் 7 , 2009 .
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ . 9.3 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார் . அதை ஏலத்தில் வாங்கிக்கொள்ள 30-க்கும் மேற்பட்ட முக்கிய பணக்காரர்கள் முன்வந்தார்கள் . இந்த ஏலத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில் , மகாத்மா காந்தி பயன்படுத்திய இப்பொருட்களை இந்தியாவின் மதுபானத் தொழில் மன்னர் கோடீஸ்வரத் தொழிலதிபர் , விஜய் மல்லையா ஏலத்தில் எடுக்க முடிவு செய்தார் . விஜய் மல்லையாவின் சார்பில் அவரது உதவியாளர் டோனி பேடி , காந்தியின் பொருட்களை 9 .3 கோடிக்கு ஏலம் எடுத்தார். காந்தி பயன்படுத்தியதை அரசிடம் அளிக்கப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார் .
மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக்குக்காக குரல் கொடுத்து வந்தார் . ஆனால் , விஜய் மல்லையாவோ வகை வகையாக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறார் . இப்படிப்பட்டவரை , மகாத்மா காந்தியின் பொருட்களை ஏலம் எடுக்கவிட்டது சரிதானா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர் .
திப்புசுல்தான் வாள் .
திப்புசுல்தானின் வாளையும் ஏலத்தில் , 2003 -ல் ரூ. 1.5 கோடிக்கு விஜய் மல்லையா எடுத்தார் . வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை ஏலத்தில் எடுப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியானது என்கிறார் விஜய் மல்லையா . இந்தியாவுக்குச் சொந்தமான பொருட்கள் இந்தியாவிற்கே திரும்பக் கிடைக்க வேண்டும் , மகாத்மா காந்தியின் பொருட்களை அரசிடம் ஒப்படைப்பதாக நான் ஏற்கனவே உறுதி அளித்துள்ளேன் என்கிறார் அவர் . எனவே இதற்கு இறக்குமதி வரி எதையும் அரசு விதிக்காது என்று நம்புகிறேன் என்றும் கூறுகிறார் அவர் .
திப்புசுல்தான் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளன . அவற்றை இந்தியாவிற்கு கொண்டு வர நான் பெரிதும் விரும்புகிறேன் . மைசூரிலோ அல்லது பெங்களூரிலோ திப்பு சுல்தான் அருங்காட்சியகம் அமைக்க விரும்புவதாகவும் , அதை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க விரும்புவதாகவும் , தற்போது மரப்பெட்டிகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது தனக்கு வருத்தத்தைத் தருவதாகவும் , கூடிய விரைவில் அவற்றை இங்கே கொண்டு வரவேண்டும் என்பதுதான் தனது விருப்பமாகும் என்றும் அவர் கூறினார் .
--- மாலைமுரசு . 07 -03 -2009 . தினசரி கொடுத்து உதவியவர், எனது மைத்துனர் . G .இரெத்தினசபாபதி . காசாளர் . S.B .I . அரியலூர்

No comments: