Saturday, April 3, 2010

ஜோக் !

ஒரு ஊர்வலம் . இரண்டு சவப்பெட்டிகள் . அதன் பின்னால் ஒரு நாய் . அதன் பின்னால் ஒரு மனிதன் . அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள் . இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க , முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன் . அதற்கு அவன் , ' முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி . இரண்டாவதில் என் மாமியார் . அவர்களுக்கான ஊர்வலம் இது ' என்றான் .
' ஐய்யய்யோ ! அப்படியா ! இந்த நாய் ? ' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன் .
' ஓ , அதுவா ? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது '
வந்தவன் சற்று யோஜித்தான் . ' அந்த நாய் எனக்குக் கிடைக்குமா ?'
' உனக்கும் வேணுமா , அப்போ பின்னாடி வர க்யூவுல போய் நில்லு ' என்றான் மனைவியை பறிகொடுத்தவன் .
இந்த ஜோக் நம்ம ஊர் சரக்கல்ல , இங்கிலாந்துக்குரியது .
--- அரசு பதில்கள் . குமுதம் , 11 . 11 . 2009 .

No comments: