Tuesday, April 20, 2010

தெரியாது , ஆனா , தெரியும் !

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் . அவரிடம் அலுவல் நாடிச் சென்றார் மறைமலையடிகள் . பரிதிமாற் கலைஞர் , குற்றியலுகரம் , முற்றியலுகரம் இரண்டிற்கும் சான்று தருமாறு கேட்டார் . அதற்கு மறைமலையடிகள் , ' எனக்குத் தெரியாது !' என்றார் .
பரிதிமாற் கலைஞர் மிகவும் மகிழ்ந்து , உடனே மறைமலையடிகளுக்கு வேலையைத் தந்தார் .
' எனக்குத் தெரியாது ' என்று சொன்னதற்கா வேலை என்று யோசிக்கிறீர்களா? மறைமலையடிகள் அளித்த விடையில் ' எனக்கு ' என்ற குற்றியலுகரமும் , ' தெரியாது ' என்ற முற்றியலுகரமும் அடங்கி இருந்ததே மறைமலையடிகளுக்கு பரிதிமாற் கலைஞர் வேலை அளிக்கக் காரணம் .
--- ஆனந்தவிகடன் . 13 . 12 . 1964 .

No comments: